புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் இடையே நேற்றிரவு 9.45 மணியளவில் இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும், பாஜக மாணவரணி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சம்மேளனத் தலைவருமான ஐஷி கோஷ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பாஜக மாணவரணி அமைப்பான ஏபிவிபி அமைப்பு மீது குற்றம்சாட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.