பள்ளிபாளையம்: ஈரோடு கே.எஸ்.நகரை சேர்ந்தவர் முருகேசன்(75). இவர் நேற்று காலை, பழைய காவிரி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பாலத்தின் தடுப்பு சுவற்றில் ஏறி, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கவனித்த அங்கிருந்தவர்கள் அவரை தடுக்க சத்தமிட்டபடி ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அவர் ஆற்றுக்குள் குதித்து விட்டார். நீச்சல் தெரிந்த காரணத்தால், அவரால் தண்ணீரில் மூழ்க முடியவில்லை. தண்ணீரில் மூழ்கவும் முடியாமல், மேலேறி வரவும் முடியாமல் தத்தளித்தார்.