டெல்லி: அவசரமாக வெளியூர் செல்ல கையில் பணம் இல்லையென்றாலும், விமானத்தில் பறக்கலாம். பயணிகளை கவர அந்தவாறு ஒரு புதுமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது போன்று தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அவசரமாக பயணம் செய்வோருக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கையில் பணம் இல்லையென்றாலும், முதலில் பயணம் செய்யுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் இணையதள பக்கத்தில் உள்ள walnut 369 செயலி மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விமானத்தில் பயணம் செய்யலாம்.