கையில் பணமில்லாவிட்டாலும் விமானத்தில் பறக்கலாம்: பயணிகளை கவர புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது ஸ்பைஸ்ஜெட்

டெல்லி: அவசரமாக வெளியூர் செல்ல கையில் பணம் இல்லையென்றாலும், விமானத்தில் பறக்கலாம். பயணிகளை கவர அந்தவாறு ஒரு புதுமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது போன்று தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் அவசரமாக பயணம் செய்வோருக்கான புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கையில் பணம் இல்லையென்றாலும், முதலில் பயணம் செய்யுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் இணையதள பக்கத்தில் உள்ள walnut 369 செயலி மூலம் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விமானத்தில் பயணம் செய்யலாம்.

விமான பயணத்திற்கு பின்பு விமான கட்டணத்தை 3,6, 9 அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம். தவணை முறையில் விமான பயண சீட்டு வாங்குபவர் தகுந்த ஆவணங்கள் முழு விவரம், வருவாய் அல்லது சான்றிதழ்கள், வங்கி கணக்கு போன்ற விவரங்களை குறிப்பிட்டால் பயண சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: