விவசாய நிலங்களுக்கு அருகே மர்ம நபர்கள் மூட்டை மூட்டையாக கொட்டி செல்லும் ரசாயன கழிவுகள்: விவசாயிகள் வேதனை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கொய்யான்கொல்லை பகுதியில் சுமார் 100  ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை, கொள்ளு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், அதன் அருகாமையில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில், ரசாயன கழிவுகள் மற்றும் அகர்பத்தி தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் ரசாயன தூள்கள் என அனைத்தையும் லாரிகளில் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து மர்ம நபர்கள் விவசாய நிலங்களுக்கு அருகே கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால், தற்போது பெய்து வரும் மழையால், கழிவுகளிலிருந்து ரசாயனம் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் கலப்பதால், நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களில்  பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அலட்சியத்தால், தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள், இதுபோன்ற திறந்த வெளிகளில் கொட்டப்படுவதால் விவசாயிகள் பாசன வசதி பெறும் நீரின் தன்மை மாருவதுடன், பொதுமக்கள் பயன்படுத்தப்படும் குடிநீர் பாதிக்கப்படுகிறது.  எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: