மும்பை: பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கும், சினிமா துறையை சேர்ந்த சாம் பாம்பேவுக்கும் கடந்த 2020 ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அவர்கள் திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டனர். கோவாவுக்கு தேனிலவு பயணமாக சென்றிருந்த பூனம் பாண்டே, திடீரென்று சாம் பாம்பே தன்னை தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். அந்த அடிப்படையில் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். அடுத்த சில நாட்களில் சாம் பாம்பே நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சாம் பாம்பேவுடனான திருமண உறவை முடித்துக்கொள்ளப் போவதாக பூனம் பாண்ேட சொல்லியிருந்தார்.