சென்னை: வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் (09.11.2021, 06.00 மணி) குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-
* வியாசர்பாடி சுரங்கப்பாதை* மேட்லி சுரங்கப்பாதை* காக்கன் சுரங்கப்பாதை (மூலக்கொத்தளம் - கொருக்குப்பேட்டை)2. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்:-* பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஙீ ஸ்டரகான்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் (ஆர்த்தி அப்பார்ட்மென்ட்ஸ்) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் ஸ்டரகான்ஸ் ரோடு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன.* நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் நீர் தேங்கி உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை. * ரி-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் நீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.* டிமலஸ் சாலை - புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் நீர் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை3.சாலையில்பள்ளம்:-திருமலைப்பிள்ளை ரோடு, காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. வாணி மஹால் - பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.4.மரங்கள் எதுவும் விழவில்லை.