கூடலூர் : தீபாவளி பண்டிகை விடுமுறையால், தேக்கடியில் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.கேரளாவில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, நேச்சர் வாக், பார்டர் வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரி செல்லும்போது நீர்நிலைகளுக்கு தண்ணீர் அருந்த வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள், பல்வேறு வகை பறவையினங்களை மிக அருகில் காணமுடியும். இதனால், சுற்றுலாப்பயணிகள் படகுச்சவாரியையே அதிகம் விரும்புகின்றனர்.