கண்ணை தோண்டுவேன்...கையை வெட்டுவேன்: பாஜ எம்பி ஆவேசம்

சண்டிகர்: உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் காணொலி மூலமாக அரியானா மாநில பாஜ மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவரும் கலந்து கொண்டனர். அரியானா மாநிலம், ரோடக் மாவட்டம், கிலோவ் கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த கோயிலை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு, அவர்களை சிறை பிடித்தனர். அரசு அதிகாரிகள் அவர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலையில் அவர்களை விடுவிடுத்தனர்.

இதன் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ரோடக் மாவட்டத்தில் பாஜ நேற்று போராட்டம் நடத்தியது. இதில் பேசிய ரோடக் தொகுதி பாஜ எம்பி அரவிந்த் சர்மா, ‘‘நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதற்கு மணீஷ் குரோவர்தான் காரணம். அவருக்கு எதிராக யாராவது கண்களை உயர்த்தினால், கண்களை தோண்டி விடுவோம். கைகளை உயர்த்தினால், கைகளை வெட்டி விடுவோம். யாரையும் விட மாட்டோம்,’’ என்றார்.

Related Stories: