சண்டிகர்: உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் காணொலி மூலமாக அரியானா மாநில பாஜ மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவரும் கலந்து கொண்டனர். அரியானா மாநிலம், ரோடக் மாவட்டம், கிலோவ் கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அந்த கோயிலை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு, அவர்களை சிறை பிடித்தனர். அரசு அதிகாரிகள் அவர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலையில் அவர்களை விடுவிடுத்தனர்.