வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பாதையில் ஆபத்தான ஓடைகளில் இரும்பு பாலம் மற்றும் கைபிடிகள் அமைக்க வனத்துறையினர் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 4500 அடி உயரத்தில் சதுரகிாி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுா்ணமி ஆகியவற்றிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோசத்திற்கு 1 நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் மாங்ேகனி ஓடை, எழும்பு ஓடை, சங்கிலி பாறை ஓடை, பிலாவடி கருப்பசாமி ஓடை, வௌ்ளப்பாறை ஓடை, சுந்தரமகாலிங்கம் கோயில் சன்னதிக்கு எதிரே உள்ள ஓடை, கோயிலுக்கு செல்லும் ஓடை என 7 ஓடைகள் உள்ளன.