திண்டுக்கல்: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகாரின்படி, தூத்துக்குடி டிஎஸ்பியின் திண்டுக்கல், தூத்துக்குடி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் (51). தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தூத்துக்குடியில் டிஎஸ்பி ஜெயராம் தங்கியுள்ள வாடகை வீட்டிலும், திண்டுக்கல்லில் உள்ள அவரது சொகுசு பங்களாவிலும் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.