மாமல்லபுரம்: மாமல்லபுரம், அடுத்த பூஞ்சேரி பகுதியில் அஸ்வினி (25), என்ற நரிக்குறவ பெண் வசித்து வருகிறார். இவரது சமூகத்தை சேர்ந்த சில தோழிகளுடன் கடந்த அக்டோபர் 24ம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் இலவசமாக வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட சென்றார். அப்போது, திருப்பி அனுப்பிவிட்டதாக, அந்த நரிக்குறவ பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த, வீடியோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த அக்டோபர் 29ம் தேதி நாட்களுக்கு முன்பு பெண்ணை அழைத்து ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி அப்பெண்ணுடன் அமர்ந்து கோயிலில் அன்னதானம் சாப்பிட்டார்.