மதுரை: கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றும் திட்டத்திற்கு தடைகோரிய வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பாக பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு டிசம்பர் 15ல் விசாரணைக்கு வரவுள்ளதால் மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.