கள்ளக்குறிச்சி: தீபாவளி நெருங்குவதால் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராய விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்மலை, மாதோர், எழுத்தவாய் நத்தம், கரடி சித்தூர், தாவடிபட்டி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகல் நேரத்திலேயே கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது என்பது புகார். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், எழுத்தவாய் நத்தம் கிராமத்தில் பகல் நேரத்திலேயே கள்ள சாராய விற்பனை நடக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.