காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் என்ஐஏ நடத்திய சோதனையில் கடந்த ஒரு வாரத்தில் 25 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜம்மு - காஷ்மீரின் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8 இடங்களில் நேற்று முதல் தொடர் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த அமீர் அகமது கோஜ்ரி, சத்தாத் அமீன் ஆகிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஜம்மு - காஷ்மீர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்ற லஷ்கர்-இ-தொய்பா (லெட்), ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்), ஹிஸ்ப்-உல்-முஜாஹிதீன் (எச்எம்), அல் பதார் ஆகிய அமைப்புகளின் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன.