பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் ஊராட்சி சார்பாக வாரத்தின் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு நிகராக நடத்தப்படும் சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடந்த ஆட்டுச் சந்தை களை கட்டியது. சாதாரணமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை ஏலத்திற்கு வரும். சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் தொடர்மழை காரணமாக நேற்று பெரம்பலூர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கு குறைவான ஆடுகளே ஏலத்திற்கு வந்திருந்தன.