விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெய்த கனமழை காரணமாக சாஸ்தா கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் ஈகோ டூரிசம் தற்காலிகமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதால் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.