தா.பழூர் : தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் சமத்துவபுரம் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையே வளர்ந்த மரக்கிளைகளை தினகரன் செய்தி எதிரொலியால் வெட்டி அகற்றப்பட்டது.
தா.பழூர் அருகே நடுவலூர் துணைமின் நிலையம் அருகே சாலையோரம் உள்ள வேப்பமரம் மற்றும் புளிய மரத்தின் கிளைகளுக்கு இடையே மின்கம்பிகள் செல்கின்றன. இந்த சாலை அதிகமாக போக்குவரத்து நிறைந்த சாலையாகும். அரியலூரில் இருந்து சுத்தமல்லி, தா.பழூர் வழியாக கும்பகோணம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வாகன போக்குவரத்து செல்லக்கூடிய பிரதான சாலை. இந்நிலையில் மழைக் காலங்களில் ஏற்படும் காற்றினால் மரக்கிளைகளில் மின்கம்பிகள் உரசி தீ பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மின்கம்பிகள் சாலையில் செல்பவர்கள் மீது அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.