ஆவடி: வட கிழக்கு பருவமழை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது, அவர் மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்துள்ள 3000 மணல் மூட்டைகள், 17 தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள், 18 ஜெனரேட்டர்கள், 8 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 10 பொக்லைன் இயந்திரங்கள், 15 டார்ச் லைட்டுகள், கவச உடைகள், கயிறு உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.