ஹரியானாவில் டிப்பர் லாரி மோதியதில் 3 பெண்கள் உயிரிழப்பு!: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது விபரீதம்..!!

சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 3 பெண் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திக்ரே எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஏராளமான பெண்கள் பேருந்துக்கு காத்திருந்தனர், அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி ஒன்று சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த பெண்கள் மீது தாறுமாறாக மோதியது.

இதில் 3 பெண் விவசாயிகள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: