திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஸ்டேட் பேங்க் இந்தியாவின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை திருட முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏரிப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஏ.டி.எம். இயந்திரத்திற்கு நள்ளிரவு இரண்டரை மணிக்கு முகமூடி அணிந்து நுழைந்த மர்மநபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளார். ஆனால் பணம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை உடைக்க முடியாததால் கொள்ளையன் பாதியிலேயே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.