இலங்கை கடற்படை சிறைபிடித்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை

அறந்தாங்கி: இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் விரைவில் கோட்டைப்பட்டினம் திரும்ப உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3பேரும் கடந்த 19ம்தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு மோதி, மீனவர்களின் விசைப்படகை கடலில் மூழ்கடித்தனர்.

இதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை  கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்நிலையில்  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இருவரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், மீனவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் இருவரும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை திரும்புவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: