அறந்தாங்கி: இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மீனவர்கள் விரைவில் கோட்டைப்பட்டினம் திரும்ப உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3பேரும் கடந்த 19ம்தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு மோதி, மீனவர்களின் விசைப்படகை கடலில் மூழ்கடித்தனர்.