ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.36,144க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது. நாள்தோறும் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. ஒருநாள் குறைவதும், மறுநாளே அதிரடியாக உயர்வதும் தங்கத்தின் வாடிக்கையாகவே உள்ளது. நகை என்பது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. கொரோனா காலத்தில் தங்கம் விலை கூடினாலும், குறைந்தாலும் அதன் மீதான மோகம் மற்றும் சற்றும் குறையவில்லை என்பதே உண்மை. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம் விலை திடீரென 35 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. பின்னர் படிப்படியாக உயர்வை கண்டு 35 ஆயிரத்திற்கு மேல் அதிகரிக்க தொடங்கியது.

இந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இடைப்பட்ட காலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் ஓரளவுக்கு உயர்வை கண்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்திருப்பது நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ. 4,518க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.24 உயர்ந்து ரூ.36,144க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.70.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூபாய் 70300.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ,4,882 எனவும் ஒரு சவரன் ரூ.39,056 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: