புதுடெல்லி: பெட்ரோல் விலை 5வது நாளாக தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், இதை ‘வரி கொள்ளை’ என்று விமர்சித்துள்ளார். ெபட்ரோல், டீசல் விலை கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரூ.35 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் இந்த ஆண்டு மட்டும் தலா ரூ.23.53 உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், ‘பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது.