துபாய்: துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. முதல் ஓவரில் ரோகித் டக்-அவுட், மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் கேப்டன் கோலி இன்னிங்ஸை நிதானமாக பில்ட் செய்தார். 45 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்தார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் 10 அரை சதங்களை பதிவு செய்த வீரர் என்ற மைல் கல்லை எட்டியுள்ளார்.