புழல்: பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (27). இவர், புழல் அடுத்த புத்தாகரத்தில் வசிக்கும் தாய்மாமன் முருகவேல் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி, சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆறுமுகம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், புத்தாகரம் சுபாஷ் நகர் முதல் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு, வாலிபர் ஒருவர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக புழல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக கிடந்தது ஆறுமுகம் என தெரியவந்தது. இதையடுத்து, அவரது தாய்மாமன் முருகவேலை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல் வெளியானது.