மரணத்திற்கு பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: மரணத்திற்கு பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  நிலத்திற்கு செல்லும் வழியில் ஒரு சமூகத்தினர் உடல்களை எரிப்பதாக கோவையை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மயானத்தை பயன்படுத்த ஒடுக்கப்பட்டோர் சமூகத்தினரை சிலர் தடுப்பதால் சாலையோரத்தில் எரிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் மயானத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: