களக்காடு: களக்காடு அருகே கீழ வடகரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரேம்குமார் (46). வனத்துறையில் திருக்குறுங்குடி வேட்டை தடுப்புக் காவலராக பணியாற்றி வரும் நிலையில் இவரது வீட்டில் நேற்று 10 அடி நீளமுடைய மலைபாம்பு புகுந்தது. அந்த பாம்பு அவரது வீட்டில் உள்ள கோழிக் கூடுக்குள் நுழைந்து, அங்கிருந்த 3 கோழிகளை பிடித்து விழுங்கியது. கோழிகள் மிரண்டு எழுப்பிய சத்தத்தை கேட்டு வந்த பிரேம்குமார் மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.