திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு தளங்களில் கடந்த பிப். 13ம் தேதி தொடங்கிய 7ம் கட்ட அகழாய்வு பணிகள் செப். 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான்கு அகழாய்வு தளங்களையும், ரூ.12 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தையும் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘கீழடியில் நவீன தொழில்நுட்பத்துடன் திறந்தவெளி தொல்லியல் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.