பாணாவரம்: பாணாவரம் சாவடி தற்காலிக பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில் பாணாவரம் சாவடி தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம், அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கட்டிட தொழிலாளர்கள், வியாபாரிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில், பாணாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.