திருச்சி: ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் நேற்று விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய பாஜக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் விவசாயிகளின் நெல், கரும்பு உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை வழங்க வேண்டும். உபியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள மாநில தலைவர் அய்யாக்கண்ணு வீட்டு முன் கடந்த 12ம் தேதி உண்ணாவிரதம் போராட்டத்தை துவக்கினர்.