செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே கரிமேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களை, ரயில்வே துறை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர்கள், மாற்று இடம் வழங்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் மனு அளித்தஅவர்களுக்கு, குடிசை மாற்று வாரிய வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள 7 ஏக்கர் அரசு நிலத்தை, செங்கல்பட்டு ஆர்டிஓ சாஜிதா பர்வீன், ஏஎஸ்பி ஆசிஷ் பச்சாரே மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.