கோவா: கோவாவில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க விரும்புகிறோம் என பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று கோவா மாநிலம் சென்றிருந்தார்.