ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ஓபிஎஸ் சகோதரர் பெயரை கூறி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்

தேனி: தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில், பெரியகுளம் தென்கரையை சேர்ந்த வணங்காமுடி மனைவி விஜயராணி நேற்று ஒரு மனு அளித்துள்ளார். அதில், ‘‘எங்கள் மகன் ஆறுமுகத்திற்கு தேனி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெரியகுளம் தென்கரையில் வசிக்கும் அனுப்பிரியா மற்றும் அவரது கணவர் சரவணன், உறவினர் அய்யப்பராஜ் ஆகியோர் ரூ.3.60 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டனர் ’’ என கூறியிருந்தார். பெரியகுளம் தென்கரையை சேர்ந்த கார்த்திக் அளித்த மனுவில், ‘‘அனுப்பிரியா, அவரது கணவர் சரவணன், உறவினர் அய்யப்பராஜ் ஆகியோர் தேனி ஆவின் நிறுவனத் தலைவராக இருக்கும் ஓ.ராஜா தங்களின் உறவினர் எனக் கூறி, ஆவினில் வேலை வாங்கித்தருவதாக முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் தலைமறைவாகி உள்ளனர். பணத்தை மீட்டு தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: