நாகை: நாகை அருகே சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 40 கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றிய விவசாயிகள் வாகன விழிப்புணர்வு பேரணியும் நடத்தி எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கடந்த 1992ம் ஆண்டில் நாகை மாவட்டம் பனங்குடியில் பொதுத்துறை சி.பி.சி.எல். நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைனில் 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்சிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.