வால்பாறை: வால்பாறையில் மற்றும் அட்டகட்டி பகுதியில் விடிய விடிய சூறைக்காற்று மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டது. ஆழியார் முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மழையால் கடும் குளிர், மூடுபனி நிலவுகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.