கோவை: கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை அருகே அன்னூரை அடுத்த பொகலூரை சேர்ந்தவர் கருப்புசாமி (48). கார்பென்டர். இவரது மகன் கார்த்திக் (28). அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் தொடர்பு வைப்பதில் கார்த்திக்கிற்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் கருப்புசாமியும், கார்த்திக்கும் ரோட்டோரம் நின்றிருந்தனர். அங்கு வந்த சதீஷ்குமாரின் தந்தை வெள்ளிங்கிரி (53), கார்த்திக்கிடம் கள்ளக்காதல் வைத்து கொண்டு என் வீட்டு பக்கம் சுற்றிக்கொண்டிருக்கிறாயா? என்று கூறி மிரட்டியுள்ளார்.