நெய்வேலி : குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் சிவகங்கை மாவட்டம் பெருமச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் முருகேஷ், வடிவேல் ஆகிய இருவரும் 800க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் ஏரிக்கரையில் கிடந்த மரவள்ளி இலைகளை தின்றதால் திடீரென மயங்கி விழுந்தன. இதில் 60 செம்மறி ஆடுகள் இறந்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவர்கள் ராஜா, வித்யாசங்கர் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிக் கிடந்த செம்மரி ஆடுகளுக்கு சிகிச்சையளித்து 62க்கும் மேற்பட்ட ஆடுகளை உயிர்பிழைக்க செய்தனர்.