பெங்களூரு: பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் விமானப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெங்களூரின் வடக்கு பகுதியில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுரங்க பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகிறது.