வேலூர்: கொரோனா அதிகரித்த காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கிய ஊரகப்பகுதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்க தொகை வழங்க கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு தலா இரு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் அரசின் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் ஊரக பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.