திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளுக்கு கடந்த 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 2 அறைகளில் வைத்து 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏஜென்டுகள் நியமிக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வாக்கு எண்ணும்போது ஒரு மேஜைக்கு 2 பேர் வீதம் 3 அறைகளுக்கு 18 பேர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் உள்பட 19 பேரை அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஒரு அறைக்கு 2 பேர் வீதம் 6 பேரும், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரையும் சேர்த்து 7 பேரை அனுமதிப்பதாக கூறியுள்ளார்.