மும்பை: மும்பை கப்பல் போதை பார்ட்டி வழக்கில் பாஜக தலைவரின் மைத்துனரை விடுவித்தது ஏன்? என்று அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆரியகான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் பிடியில் சிக்கிய பாஜக தலைவர் மோஹித் கம்போஜின் மைத்துனர் ரிஷப் சச்தேவை, அதிகாரிகள் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், ‘மும்பை பாஜக கட்சியின் இளைஞரணி முன்னாள் தலைவராக இருப்பவர் மோஹித் கம்போஜ். இவரது மைத்துனர் ரிஷப் சச்தேவ், கைதான ஆரிய கான் மற்றும் பிறருடன் வரும் புகைப்படத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டனர்.