ராமநாதபுரம்: தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் பெட்டகங்கள் வழங்கினார்.இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் பரவலை தடுக்க உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.