மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கட்டு கட்டும் பிரிவில் தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த ரமேஷ்(53) என்பவரும், சவக்கிடங்கில் நாகை ஏனங்குடியை சேர்ந்த ரமேஷ்(42) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செப்.27ம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஏனங்குடி ரமேசை, கரந்தை ரமேஷ் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த ஏனங்குடி ரமேஷ், தனது மகன்கள் தியாகராஜன், தீனதயாளன் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு வரவழைத்து பணி முடித்து வீட்டுக்கு புறப்பட்ட கரந்தை ரமேஷை, மருத்துவமனை வளாகத்திலேயே ஏனங்குடி ரமேஷ் தன் மகன்களுடன் சேர்ந்து அடித்து கீழே தள்ளினார்.