பொது இடங்களில் நிலவேம்பு கசாயம்: முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, பருவமழைக்கு முன்பாக டெங்கு குறித்து விழிப்புணர்வு பணிகளை தொடங்க அரசு முன்வர வேண்டும்.

டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அதே போன்று, பொது இடங்களில் நிலவேம்பு கசாயத்தை வழங்கும் பணியை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: