பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஆய்வு செய்தார். மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். மேலும், அத்திப்பட்டு புதுநகர் உள்ள பி.பி.சி.எல்./எச்.பி.சி.எல்/ என்.டி.இ..சி.எல்/இந்தியா சிமென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு நேரில் சென்றார்.