ஆஸ்லோ : 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல், இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.