புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து 37 ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் 5 ‘எஸ்.400’ விமான எதிர்ப்பு ஏவுகணை தளவாடங்களை வாங்க இந்தியா சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். ‘இதனால் இந்தியா பொருளாதார தடையை சந்திக்க நேரிடும்’ என்றும் எச்சரித்தார். ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ல் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்க முதல் தவணையாக ரூ.6 ஆயிரம் கோடி கொடுத்தது. இந்த ஏவுகணை தளவாடங்கள் இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து இந்தியா வரும் என்று விமானப்படை தளபதி சவுதாரி குறிப்பிட்டுள்ளார்.