ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கைத்தறி துறையில் பழமை வாய்ந்த கைராட்டை கண்காட்சி நடந்தது.ஆண்டிபட்டி பகுதியில் தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியத்தில் பழமை வாய்ந்த பொருட்கள், வரலாற்று படைப்புடைய பொருட்கள், தேனி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் ஆண்டிபட்டி சுற்றியுள்ள மக்கள் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஓர் அரிய பொருளை மக்கள் அரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரிய பொருள் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் பழமை வாய்ந்த பொருளான கைராட்டை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.