கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு 410 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 347 கனஅடி திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால், ஓசூர் அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு 707 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.