சென்னை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா ஆகிய இருவரும் அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றனர்.அப்போது அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த வாகனம் ஒன்று விவசாயிகள் நின்றிருந்த கூட்டத்தில் திடீரென பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து பாஜவை சேர்ந்த நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.